வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்திய வாலிபர் கைது


வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 29 Sep 2019 10:30 PM GMT (Updated: 29 Sep 2019 4:57 PM GMT)

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தேனி,

தேனி அருகே உள்ள ஊஞ்சாம்பட்டியை சேர்ந்த அபுபக்கர் மகள் மெகருன்னிசா (வயது 24). இவருக்கும், அன்னஞ்சியை சேர்ந்த காஜாமைதீன் மகன் மல்கர்பாட்ஷா (24) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மெகருன்னிசாவின் பெற்றோர் 25 பவுன் நகைகளும், ரூ.1 லட்சம் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில், மெகருன்னிசாவை மேலும் வரதட்சணையாக ஒரு கார், சொத்தில் பங்கு வாங்கி வருமாறு மல்கர்பாட்ஷா மற்றும் அவருடைய குடும்பத்தினர் மிரட்டி கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் மெகருன்னிசா புகார் செய்தார். அவர் இந்த புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தேனி அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், மல்கர்பாட்ஷா, அவருடைய தந்தை காஜாமைதீன், தாயார் பாத்திமா ஆகிய 3 பேர் மீதும் தேனி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்தார். இதில் மல்கர்பாட்ஷாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story