வெண்ணாற்றில் வாலிபர் பிணம் கொலை செய்து வீசப்பட்டாரா? போலீசார் விசாரணை


வெண்ணாற்றில் வாலிபர் பிணம் கொலை செய்து வீசப்பட்டாரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 Oct 2019 10:15 PM GMT (Updated: 17 Oct 2019 7:21 PM GMT)

தஞ்சை வெண்ணாற்றில் வாலிபர் பிணம் கிடந்தது. அவரை யாரும் கொலை செய்து ஆற்றில் வீசினார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை பள்ளிஅக்ரகாரம் வெண்ணாற்றில் நேற்று காலை புதரில் ஆண் பிணம் கிடந்தது. பிணமாக கிடந்தவருக்கு 30 வயது இருக்கும். அவர் உள்ளாடை மட்டும் அணிந்திருந்த நிலையில் கிடந்தார். நேற்று காலை அந்த பகுதிக்கு குளிக்க சென்றவர்கள் வாலிபரின் பிணம் கிடப்பதை பார்த்து தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஆற்றில் பிணம் கிடப்பது அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். மேலும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் பிணமாக கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. அவர் குளிக்கும் போது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்து பிணத்தை ஆற்றில் வீசி சென்றனரா? என தெரியவில்லை.

இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story