கன்னியாகுமரி அருகே 10–ம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம்? போலீசார் விசாரணை


கன்னியாகுமரி அருகே 10–ம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Nov 2019 10:15 PM GMT (Updated: 12 Nov 2019 3:16 PM GMT)

கன்னியாகுமரி அருகே வடக்கு தாமரைகுளம் பகுதியை சேர்ந்த 10–ம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம் பிடித்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி,

சாமித்தோப்பு அருகே வடக்கு தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இந்த மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பொன்னீஷ் (வயது 27) என்பவரும் காதலித்து வந்ததாகவும், இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மாணவியை கண்டித்து வந்தனர்.

இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உறவினர்கள் உதவியுடன் பல இடங்களில் தேடினார்கள். ஆனால், மாணவியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே பொன்னீசும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனால், மாணவி காதலனுடன் ஓடியதாக தெரிகிறது.

இதுகுறித்து மாணவியின் தாயார் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து காதலனுடன் 10–ம் வகுப்பு மாணவி ஓட்டம் பிடித்தாரா? என விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story