தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை குருங்குளத்தில் அதிகபட்சமாக 48 மி.மீ. பதிவானது


தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை குருங்குளத்தில் அதிகபட்சமாக 48 மி.மீ. பதிவானது
x
தினத்தந்தி 28 Nov 2019 10:45 PM GMT (Updated: 28 Nov 2019 7:20 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. குருங்குளத்தில் அதிகபட்சமாக 48 மி.மீ. பதிவானது.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் தற்போது வடகிழக்குப்பருவமழை பெய்து வருகிறது. இதன் தொடக்க காலக்கட்டத்தில் தொடர்ந்து 1 வாரம் மழை பெய்தது. அதன் பின்னர் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் முதல் தஞ்சையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலையில் இருந்தும் விட்டு, விட்டு மழை பெய்தது. காலை 10 மணிக்கு பின்னர் வெயில் அடித்தது. அதன்பின்னர் லேசான தூறலுடன் மழை பெய்தது. இதே போல் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குருங்குளத்தில் அதிகபட்சமாக 48 மி.மீ. பதிவானது.

விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழைஅளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

குருங்குளம் 48, பட்டுக்கோட்டை 44, மஞ்சளாறு 44, திருவிடைமருதூர் 38, மதுக்கூர் 26, பேராவூரணி 26, அதிராம்பட்டினம் 24, அய்யம்பேட்டை 24, வல்லம் 23, ஈச்சன்விடுதி 22, பாபநாசம் 21, கும்பகோணம் 21, கல்லணை 21, பூதலூர் 21, தஞ்சை 17, வெட்டிக்காடு 16, திருக்காட்டுப்பள்ளி 11, திருவையாறு 10, ஒரத்தநாடு 10, நெய்வாசல் தென்பாதி 9.

Next Story