மன்னார்குடியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


மன்னார்குடியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Jan 2020 10:15 PM GMT (Updated: 23 Jan 2020 7:15 PM GMT)

மன்னார்குடியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 12 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இது குறித்து மோட்டார் சைக்கிளை இழந்தவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மதுக்கூர் சாலையில் கோபிரளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி பிடித்து மன்னார்குடி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில் அவர்கள், தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பாவாஜி கோட்டையை சேர்ந்த முத்துராஜா (வயது 24), அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (23) என தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் மன்னார்குடி, மதுக்கூர், பட்டுக்கோட்டை ஆகிய பகுதி களில் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. முத்துராஜா, சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 12 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story