அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்


அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 29 Feb 2020 11:00 PM GMT (Updated: 29 Feb 2020 10:54 PM GMT)

அ.தி.மு.க. சார்பில் சங்கராபுரம் மற்றும் திருக்கோவிலூர் பகுதியில் ஜெய லலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டியில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். கிளை செயலாளர்கள் சீனுவாசன், பழனி, ஊராட்சி கழக செயலாளர் பூவராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் சீனுவாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் ரவி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் 720 பெண்களுக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பழனிசாமி இலவச சேலை வழங்கினார்.

இதில் மாவட்ட பொருளாளர் ராமசந்திரன், முன்னாள் மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், கூட்டுறவு சங்க தலைவருமான மாரங்கியூர் எம்.இளங்கோவன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் சொரையப்பட்டு நெடுஞ்செழியன், மாவட்ட மாணவர் அணி தலைவர் சீனுவாசன், பொறியாளர் அணி நிர்வாகி பார்த்திபன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ராஜ்குமார், தங்க.பிரகா‌‌ஷ், ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் முத்துகிரு‌‌ஷ்ணன், கிளை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் தமிழரசன், இணை செயலாளர் செல்வி, துணை செயலாளர் மணிமாலா, மாவட்ட பிரதிநிதிகள் மகாராஜன், தாமோதரன், கலாவதி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாணவர் அணி செயலாளர் துரை நன்றி கூறினார்.

தமிழக அரசின் சாதனைகள்

இதேபோல் திருக்கோவிலூரில் ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளரும், கூட்டுறவு விற்பனை சங்க தலைவருமான ஏ.பி.பழனி தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் சி.ஆர்.சம்பத், நகர இளைஞரணி செயலாளர் மகாதேவன், பேரவை நகர செயலாளர் மணி, நகர பொருளாளர் ஆதம்‌‌ஷபி, கூட்டுறவு சங்க இயக்குனர் சி.ஆர்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளரும், கூட்டுறவு வங்கி தலைவருமான கே.சுப்பு என்கிற சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். பொதுக்குழு உறுப்பினரும், நிலவள வங்கி தலைவருமான ஆர்.பார்த்தசாரதி தொடக்க உரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில பேரவை இணை செயலாளர் கே.ஏ.கே.முகில் கலந்து கொண்டு தமிழக அரசின் சாதனைகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட பேரவை செயலாளரும், மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை தலைவருமான ஏ.சந்தோ‌‌ஷ், ஒன்றிய பேரவை செயலாளரும், கூட்டுறவு சங்க தலைவருமான என்.சேகர், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் ஏ.கண்ணன், கூட்டுறவு சங்க தலைவர்கள் துறிஞ்சிப்பட்டு வி.முருகன், மிலாரிப்பட்டு பி.பரசுராமன், வீரட்டகரம் டி.ராமலிங்கம், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் கே.உமாசங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.அருணகிரி, வார்டு செயலாளர்கள் ஆர்.மனோகர், எஸ்.துரைராஜ், கே.ராஜி, பி.சின்னதம்பி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வார்டு செயலாளர் ஜி.அசோக்மேத்தா நன்றி கூறினார்.

சங்கராபுரம்

சங்கராபுரத்தில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் அரசு தலைமை தாங்கினார். அவைத்தலைவர்கள் திருமால், ‌ஷாஜகான், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை துணைத்தலைவர் சன்னியாசி, ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நாராயணன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் ஒன்றிய. பாசறை செயலாளர் குமரவேல், ஜெயலலிதா பேரவை துணை தலைவர் கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதி அண்ணாமலை, பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி, பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் கலைவாணி, கோவிந்தன், வக்கீல்கள் தாமரைச்செல்வன், அன்சாரி, நிர்வாகிகள் ராஜா, ராஜமாணிக்கம், ராஜப்பா, சுமதி சின்னசாமி, குசேலன், பன்னீர்செல்வம், கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story