150 படுக்கைகள் தயார்: புதுச்சேரி மாநிலத்தில் 515 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் நாராயணசாமி தகவல்


150 படுக்கைகள் தயார்: புதுச்சேரி மாநிலத்தில் 515 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 23 March 2020 11:58 PM GMT (Updated: 23 March 2020 11:58 PM GMT)

கொரோனா வைரஸ் கிருமி தடுப்பு நடவடிக்கையாக 515 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா தொற்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் புதுச்சேரிக்கு 6 ஆயிரம் வெளிநாட்டவர்கள் வந்துள்ளனர். அவர்கள் 300 ஓட்டல்களில் தங்கி இருந்தனர். அவர்களில் 90 சதவீதம் பேர் சொந்த ஊர்களுக்கு திரும்பிவிட்டார்கள். வெளிநாட்டினர் தங்கியிருந்த ஓட்டல்கள், அவர்களை உபசரித்த ஓட்டல் ஊழியர்கள் குறித்து காவல்துறையினர் கணக்கெடுத்துள்ளனர்.

தனிமையில் 515 பேர்

அதன்படி 515 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள னர். புதுவையில் யாராவது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

இருந்தபோதிலும் பிற நோயாளிகளிடையே அச்சம் ஏற்படும் என்பதால் புதுவை பல் மருத்துவக்கல்லூரியில் 50 படுக்கைகள், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயார் செய்துள்ளோம். மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story