தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 380 பேர் கைது: 105 வாகனங்கள் பறிமுதல்


தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 380 பேர் கைது: 105 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 27 April 2020 11:30 PM GMT (Updated: 27 April 2020 7:56 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறிய 380 பேர் கைது செய்யப்பட்டனர். 105 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகளில் கண்காணிப்பு பணியை போலீசார் மேற்கொண்டனர். ஊரடங்கை மீறி மோட்டார் சைக்கிள்களில் சென்ற பலரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதேபோல் தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்திருந்தவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக மாவட்டம் முழுவதும் நேற்று இரவு வரை 380 பேர் கைது செய்யப்பட்டனர். 105 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சாராயம் காய்ச்சியது தொடர்பாக 10 பேர் சிக்கினர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 10 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 84 லிட்டர் கள்ளசாராயமும், 460 லிட்டர் ஊறலும், 1 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story