கொரோனா பாதித்த மூதாட்டிக்கு சிகிச்சை: ஜிப்மரில் 44 மருத்துவ பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்


கொரோனா பாதித்த மூதாட்டிக்கு சிகிச்சை: ஜிப்மரில் 44 மருத்துவ பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
x
தினத்தந்தி 2 May 2020 11:44 PM GMT (Updated: 2 May 2020 11:44 PM GMT)

புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் கொரோனா பாதித்த மூதாட்டிக்கு சிகிச்சை அளித்த 44 மருத்துவ பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

புதுச்சேரி,

புதுவை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை யில் மத்திய அரசு அனுமதி யுடன் கொரோனா நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளுடன் கூடிய 300 படுக்கைகள் கொண்ட தனிவார்டு அமைக் கப்பட்டு உள்ளது. இங்குள்ள ஆய்வகத்தில் புதுச்சேரியின் அனைத்து மருத்துவமனை களில் இருந்து நோய் அறிகுறி காரணமாக அனுமதிக்கப் பட்ட நோயாளிகளுக்கும் கொரோனா வைரஸ் பரி சோதனை மேற்கொள்ளப் பட்டது.

இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் வயிற்று வலிக்காக அனுமதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 64 வயதான மூதாட்டிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட் டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் மூதாட்டியின் உறவினர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும் பரிசோ தனையில் கண்டு பிடிக்கப் பட்டது. இதையடுத்து அவர் கள் 3 பேருக்கும் ஜிப்மரில் உள்ள கொரோனா தனிவார் டில் சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.

44 மருத்துவ பணியாளர்கள்

இதற்கிடையே ஜிப்மர் மருத்துவமனையில் மூதாட் டிக்கு வயிற்று வலிக்காக சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவ பிரிவு மூடப்பட்டது. மேலும் மூதாட்டிக்கு சிகிச்சை அளித்த மருத்துவ பணி யாளர்கள், அந்த பிரிவில் பணியாற்றியவர்கள் என மொத்தம் 44 பேர் ஜிப்மரில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் 40 மருத்துவ பணியாளர்கள் தீவிர கண்காணிப்பில் மற்றும் சுய கவனிப்பில் வைக்கப்பட்டு இருக்கின்றனர்.

Next Story