ஒடிசாவை சேர்ந்த 60 பேர் வேலூரில் இருந்து பஸ்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைப்பு


ஒடிசாவை சேர்ந்த 60 பேர் வேலூரில் இருந்து பஸ்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 9 May 2020 11:15 PM GMT (Updated: 9 May 2020 10:24 PM GMT)

ஒடிசாவை சேர்ந்த 60 பேர் வேலூரில் இருந்து பஸ்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வேலூர், 

வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா போன்ற வடமாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைக்காக வந்தனர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வேலூர் மாவட்டத்தில் வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளர்களும் ஊருக்கு செல்ல முடியாமல் இருந்தனர். இதையடுத்து, தமிழக அரசின் நடவடிக்கையால் அவர்கள் பல்வேறு கட்டங்களாக ரெயில் மற்றும் கார் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து ஒடிசாவுக்கு ரெயில் செல்ல உள்ளது. எனவே வேலூரில் தங்கியுள்ள ஒடிசாவை சேர்ந்த 60 பேரை சென்னைக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அதன்படி நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 2 அரசு பஸ்கள் மூலம் 60 பேரும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story