கொரோனா பற்றிய சந்தேகங்களுக்கு சென்னையில் மண்டல வாரியாக தொலைபேசி எண்கள் : மாநகராட்சி வெளியீடு


கொரோனா பற்றிய சந்தேகங்களுக்கு சென்னையில் மண்டல வாரியாக தொலைபேசி எண்கள் : மாநகராட்சி வெளியீடு
x
தினத்தந்தி 11 Jun 2020 1:18 AM GMT (Updated: 11 Jun 2020 1:18 AM GMT)

கொரோனா நோய் தொடர்பான பொதுமக்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக பெருநகர சென்னை மாநகராட்சியில் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.

சென்னை,

சென்னையில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மண்டலவாரியாக தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்ட உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவொற்றியூர் மண்டலத்துக்கு 044-46556301, மணலி 044-46556302, மாதவரம் 044-46556303, தண்டையார்பேட்டை 044-46556304, ராயபுரம் 044-46556305, திரு.வி.க.நகர் 044-46556306, அம்பத்தூர் 044-46556307, அண்ணாநகர் 044-46556308, தேனாம்பேட்டை 044-46556309, கோடம்பாக்கம் 044-46556310, வளசரவாக்கம் 044-46556311, ஆலந்தூர் 044-46556312, பெருங்குடி 044-46556313, அடையாறு 044-46556314, சோழிங்கநல்லூர் 044-46556315, ரிப்பன் மாளிகை 044-46556300 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story