லாலாபேட்டை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை போலீசார் விசாரணை


லாலாபேட்டை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 Jun 2020 10:09 PM GMT (Updated: 14 Jun 2020 10:09 PM GMT)

லாலாபேட்டை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாலாபேட்டை,

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள கள்ளப்பள்ளி காவல்கார தெருவை சேர்ந்தவர் திராவிடஜோதி (வயது 34). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த திராவிடஜோதி திடீரென மண்எண்ணெய்யை தனது உடல் முழுவதும் ஊற்றி கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர், உடலில் எரிந்த தீயை அணைத்தனர்.

பலி

மேலும், தீக்காயம் அடைந்த திராவிடஜோதியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை திராவிடஜோதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லாலாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, திராவிடஜோதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story