கொளத்தூரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தாய் கொரோனாவால் பலி


கொளத்தூரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தாய் கொரோனாவால் பலி
x
தினத்தந்தி 29 Jun 2020 10:52 AM IST (Updated: 29 Jun 2020 10:52 AM IST)
t-max-icont-min-icon

கொளத்தூரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தாய், கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

திரு.வி.க.நகர்,

சென்னையில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சென்னை மாநகராட்சி திரு.வி.க. நகர் மண்டலத்துக்கு உட்பட்ட கொளத்தூர், தயாளு நகரில் வசித்து வந்தவர் பார்வதி(வயது 67). இவரது கணவர் பரமசிவம், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நலம் இன்றி இறந்துவிட்டார். பார்வதியின் மகன் ஆனந்த். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 22-ந் தேதி பார்வதிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனாவால் பலி

அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. உடனடியாக அவர் சிகிச்சைக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பார்வதி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் நேற்று மதியம் கொளத்தூர் நேர்மை நகரில் தகனம் செய்யப்பட்டது. தற்போது ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனந்த் மற்றும் அவருடைய மனைவி பார்வதி இருவரும் தங்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 More update

Next Story