திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 409- ஆக உயர்வு


திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 409- ஆக உயர்வு
x
தினத்தந்தி 17 July 2020 11:00 PM GMT (Updated: 17 July 2020 11:00 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 409-ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் திருப்பூர் திருநீலகண்டபுரத்தை சேர்ந்த 66 வயது ஆண், 15 வேலம்பாளையத்தை சேர்ந்த 33 வயது பெண், 15 வேலம்பாளையம் நெய்காரதோட்டத்தை சேர்ந்த 39 வயது ஆண், திருப்பூர் டூம் லைட் காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்த 75 வயது பெண், 33 வயது பெண், எஸ்.வி. காலனியை 4-வது தெருவை சேர்ந்த 50 வயது ஆண், வி.ஓ.சி.நகரை சேர்ந்த 23 வயது ஆண், மகாலட்சுமிநகரை சேர்ந்த 48 வயது ஆண்.

எஸ்.வி. காலனியை சேர்ந்த 3-வது தெருவை சேர்ந்த 38 வயது ஆண், காங்கேயம் ரோடு வெங்கடேஷ்வராநகரை சேர்ந்த 32 வயது ஆண், வெங்கடேஷ்புரத்தை சேர்ந்த 38 வயது ஆண், தாராபுரம் ஜமால்புதூரை சேர்ந்த 31 வயது ஆண், எஸ்.பி.ஐ. காலனியை சேர்ந்த 37 வயது பெண், மிலிட்டரி காலனியை சேர்ந்த 50 வயது ஆண், மடத்துக்குளம் கணியூரை சேர்ந்த 50 வயது ஆண்.

பல்லடம் ரங்கநாதன் தெருவை சேர்ந்த 33 வயது ஆண், கருவம்பாளையம் ஆலங்காடு பகுதியை சேர்ந்த 52 வயது ஆண், வீரபாண்டி பாரதிநகரை சேர்ந்த 39 வயது ஆண், ஆலங்காட்டை சேர்ந்த 63 வயது ஆண், ஓம்சக்தி கோவில் தெருவை சேர்ந்த 24 வயது ஆண், இந்திராநகரை சேர்ந்த 48 வயது ஆண், பள்ளப்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த 29 வயது ஆண், கணபதிபாளையம் 59 வயது ஆண், அண்ணாநகர் கொங்கு மெயின்ரோட்டை சேர்ந்த 33 வயது ஆண், மடத்துக்குளம் கழுக்கரையை சேர்ந்த 40 வயது பெண், தாராபுரம் குளத்துபுன்னை தெருவை சேர்ந்த 40 வயது ஆண், பல்லடம் முல்லைநகரை சேர்ந்த 24 வயது ஆண், 53 வயது பெண் ஆகிய 28 பேர் ஆவர்.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவ மனையில் சிகிச்சை

இவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 409-ஆக உயர்ந்துள்ளது.

Next Story