செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 487 பேருக்கு கொரோனா பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 487 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 5 Aug 2020 9:51 PM GMT (Updated: 5 Aug 2020 9:51 PM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 487 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை எட்டியது.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட அடிகளார் தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 வயது சிறுவன், 8 வயது சிறுமி, 28 வயது இளம்பெண், மற்றொரு ஒரே குடும்பத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண், 45 வயது பெண் உள்பட 33 பேரும், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஊரப்பாக்கம் பிரியா நகரை சேர்ந்த 24, 28 மற்றும் 33 வயது பெண்கள், 5 வயது சிறுமி, 32 வயது வாலிபர், 52 வயது பெண் உள்பட 50 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்பட கிராமப்பகுதியில் 5 பேர் ஆகியோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 487 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 484 ஆக உயர்ந்தது. இவர்களில் 13 ஆயிரத்து 522 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 279 ஆனது. 2,683 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் நகராட்சி பகுதியில் 4 பேர், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 12 பேர் உள்பட திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 472 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 15 ஆயிரத்து 570 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில் 11 ஆயிரத்து 759 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 3,548 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 6 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 263 ஆக உயர்ந்துள்ளது.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர், ஒரகடம் பகுதியை 47 வயது பெண், 54 வயது ஆண், மணிமங்கலம் பகுதியை சேர்ந்த 45, 27 வயது ஆண்கள், வடமேல்பாக்கம் பகுதியை சேர்ந்த 43 வயது ஆண், ஆதனூர் பகுதியை சேர்ந்த 2 ஆண்கள் மற்றும் 26 வயது பெண் உள்பட 3 பேர், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 61 வயது முதியவர், வடக்குப்பட்டு பகுதியை சேர்ந்த (21) வயது வாலிபர் உள்பட காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 342 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை 10 ஆயிரத்து 655 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 7,675 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 2,846 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 6 பேர் பலியானதால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆனது.

Next Story