திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 388 பேர் கொரோனாவால் பாதிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 388 பேர் கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 7 Aug 2020 11:12 PM GMT (Updated: 7 Aug 2020 11:12 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 388 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 15 பேர், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 20 பேர் உள்பட திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 388 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 16 ஆயிரத்து 220 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில் 12 ஆயிரத்து 602 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 3,344 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 6 பேர் இறந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.

வண்டலூர்

செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட சதானந்தபுரம் எம்.ஜி.ஆர். தெருவில் வசிக்கும் 2 ஆண், 1 பெண் உள்பட 3 பேர், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 6 பேர், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதியில் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 319 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 227 ஆக உயர்ந்து உள்ளது.

இவர்களில் 14 ஆயிரத்து 306 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 292 ஆக உயர்ந்தது. 2,629 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர் உள்பட 2 ஆண்கள், 42 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 166 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 174 ஆக உயர்ந்து உள்ளது.

இவர்களில் 8 ஆயிரத்து 340 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்தது. 2,692 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story