செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 388 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 388 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2020 1:02 AM GMT (Updated: 12 Aug 2020 1:02 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 388 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஊரப்பாக்கம் எம்.ஜி.நகர் பகுதியை சேர்ந்த 50 வயது பெண், 54 வயது பெண், 60 வயது முதியவர், 32 வயது வாலிபர், கூடுவாஞ்சேரி டிபன்ஸ் காலனி 1-வது தெருவில் வசிக்கும் 17 வயது சிறுவன், 29 வயது வாலிபர், 61 வயது முதியவர், 50, 54 வயது பெண்கள் உள்பட 33 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதியில் 2 பேர், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூர் நின்னகரை பஜனை கோவில் தெருவில் வசிக்கும் 68 வயது முதியவர், 42 வயது ஆண் உள்பட 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 388 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 735 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 408 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்தது. 3 ஆயிரத்து 11 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம், ராஜாஜிபுரம் போன்ற பகுதிகளில் நேற்று கொரோனா தொற்றால் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடம்பத்தூர் ஒன்றியம் மணவாள நகரில் 17 பேர், மப்பேடு பகுதியில் 6 பேர், புதுப்பட்டு பகுதியில் 5 பேர், கடம்பத்தூர் மற்றும் வெள்ளேரி தாங்கலில் 4 பேர், போளிவாக்கத்தில் 2 பேர், கூவம், அதிகத்தூர், புதுமாவிலங்கை, விடையூர், காரணி, ஆட்டுப்பாக்கம், பிஞ்சிவாக்கம், கீழச்சேரி ,மேல்நல்லத்தூர் போன்ற பகுதிகளில் தலா ஒருவர் உள்ளிட்ட மொத்தம் 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 362 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் தொற்றால் 17 ஆயிரத்து 706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 13 ஆயிரத்து 784 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 3 ஆயிரத்து 624 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் மாவட்டம் முழுவதும் 8 பேர் இறந்துள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 298 பேர் இறந்துள்ளனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியை சேர்ந்த 25, 31, 19 வயது ஆண்கள், சோமங்கலம், அமரம்பேடு பகுதியை சேர்ந்த 6 வயது முதியவர் ஒரகடம் பகுதியை சேர்ந்த 31 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து இவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 330 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதுவரை 12 ஆயிரத்து 470 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.


Next Story