கர்நாடகத்தில் புதிய உச்சம் ஒரேநாளில் 7,883 பேருக்கு கொரோனா பாதிப்பு 113 பேர் பலியான பரிதாபம்


கர்நாடகத்தில் புதிய உச்சம் ஒரேநாளில் 7,883 பேருக்கு கொரோனா பாதிப்பு 113 பேர் பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 12 Aug 2020 10:22 PM GMT (Updated: 12 Aug 2020 10:22 PM GMT)

கர்நாடகத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரேநாளில் 7,883 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 113 பேர் கொரோனாவுக்கு பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது. தினமும் சராசரியாக 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. அத்துடன் தினமும் 100 பேர் சராசரியாக கொரோனாவுக்கு தங்களது உயிரை பறி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், கர்நாடகத்தில் நேற்று 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 88 ஆயிரத்து 511 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். மேலும் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி 3 ஆயிரத்து 398 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில், கர்நாடகத்தில் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 113 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

7,883 பேருக்கு பாதிப்பு

கர்நாடகத்தில் ஏற்கனவே 1 லட்சத்து 88 ஆயிரத்து 511 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இந்த நிலையில், நேற்று ஒரேநாளில் புதிதாக 7,883 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 96 ஆயிரத்து 494 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 12 ஆயிரத்து 633 பேர் குணமடைந்துள்ளனர். இதில், நேற்று மட்டும் 7 ஆயிரத்து 34 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 80 ஆயிரத்து 343 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று பெங்களூரு நகரில் 2,802 பேருக்கும், மைசூருவில் 554 பேருக்கும், கலபுரகியில் 144 பேருக்கும், தார்வாரில் 269 பேருக்கும், பல்லாரியில் 635 பேருக்கும், கொப்பலில் 202 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 229 பேருக்கும், பாகல்கோட்டையில் 170 பேருக்கும், உடுப்பியில் 263 பேருக்கும், உத்தரகன்னடாவில் 84 பேருக்கும், பெலகாவியில் 314 பேருக்கும், விஜயாப்புராவில் 121 பேருக்கும், துமகூருவில் 121 பேருக்கும், மண்டியாவில் 121 பேருக்கும், ராய்ச்சூரில் 191 பேருக்கும், பீதரில் 91 பேருக்கும், தாவணகெரேயில் 239 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 182 பேருக்கும், சிக்கபள்ளாப்பூரில் 81 பேருக்கும், கோலாரில் 33 பேருக்கும், குடகில் 29 பேருக்கும், சித்ரதுர்காவில் 61 பேருக்கும், சாம்ராஜ்நகரில் 68 பேருக்கும், ஹாசனில் 258 பேருக்கும், சிக்கமகளூருவில் 112 பேருக்கும், யாதகிரியில் 107 பேருக்கும், ராமநகரில் 63 பேருக்கும், ஹாவேரியில் 132 பேருக்கும், கதக்கில் 148 பேருக்கும், சிவமொக்காவில் 69 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

113 பேர் பலி

மேலும் கர்நாடகத்தில் நேற்று ஒரேநாளில் 113 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். பெங்களூருவில் 23 பேரும், மைசூருவில் 11 பேரும், பல்லாரியில் 9 பேரும், தட்சிண கன்னடாவில் 7 பேரும், துமகூரு, தாவணகெரே, ஹாசன், பெலகாவியில் தலா 6 பேரும், ராய்ச்சூர், சிவமொக்காவில் தலா 4 பேரும், கலபுரகி, உடுப்பி, மண்டியா, பீதர், சாம்ராஜ்நகரில் தலா 3 பேரும், கோலார், யாதகிரி, சிக்கமகளூரு, விஜயாப்புரா, தார்வார், கொப்பல், சிக்கபள்ளாப்பூரில் தலா 2 பேரும், கதக், ஹாவேரியில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 510 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் நேற்று புதிய உச்சமாக 7 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story