செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 453 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 453 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2020 12:15 AM GMT (Updated: 14 Aug 2020 12:15 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றால் 453 பேர் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் 7 பேர் பலியானார்கள்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 15 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 7 பேர், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 40 பேர் நேற்று கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 453 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 640 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 16 ஆயிரத்து 317 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று ஒரே நாளில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 329 ஆக உயர்ந்தது. 2,994 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 16 பேர், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 28 பேர் உள்பட திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 390 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 18 ஆயிரத்து 477 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் 14 ஆயிரத்து 359 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 3 ஆயிரத்து 803 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 6 பேர் பலியானதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 315 ஆனது.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர், கீழ் படப்பையை சேர்ந்த 29 வயது பெண், படப்பை மெயின்ரோடு பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர், ஒரகடம் பகுதியை சேர்ந்த 30, 26, 29, 25 வயது வாலிபர்கள், சாலமங்கலம் பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 243 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 85 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 10 ஆயிரத்து 225 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்தது. 2,694 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story