சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 432 பேருக்கு தொற்று


சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 432 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 29 Aug 2020 11:59 PM GMT (Updated: 29 Aug 2020 11:59 PM GMT)

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 432 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழப்புகளும் தினமும் ஏற்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 130-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 437 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 432 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 241 பேர், கெங்கவல்லியில் 34 பேர், ஆத்தூரில் 21 பேர், ஓமலூரில் 19 பேர், எடப்பாடியில் 18 பேர், தலைவாசலில் 15 பேர், சேலம் ஒன்றியத்தில் 13 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 11 பேர், வாழப்பாடியில் 7 பேர், கொளத்தூர், சங்ககிரி, பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், மேட்டூர், நங்கவள்ளி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், மேச்சேரி, வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், காடையாம்பட்டி, மகுடஞ்சாவடி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், நரசிங்கப்புரம், வாழவந்தி ஆகிய பகுதியில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டிஸ்சார்ஜ்

மேலும் நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 5 பேர், கிருஷ்ணகிரி, கோவை, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் இருந்து சேலம் வந்த தலா 2 பேர், ராமநாதபுரத்தில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 248 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 359 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதேபோல நாமக்கல்லில் 70 பேரும், தர்மபுரியில் 14 பேரும், கிருஷ்ணகிரியில் 40 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story