கர்நாடகத்தில் புதிதாக 9,894 பேருக்கு கொரோனா பாதிப்பு மேலும் 104 பேர் சாவு


கர்நாடகத்தில் புதிதாக 9,894 பேருக்கு கொரோனா பாதிப்பு மேலும் 104 பேர் சாவு
x
தினத்தந்தி 13 Sep 2020 10:04 PM GMT (Updated: 13 Sep 2020 10:04 PM GMT)

கர்நாடகத்தில் நேற்று புதிதாக 9 ஆயிரத்து 894 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 104 பேர் இறந்து உள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 4 லட்சத்து 49 ஆயிரத்து 551 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று புதிதாக 9,894 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவுக்கு பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 59 ஆயிரத்து 445 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 4½ லட்சத்தை தாண்டிவிட்டது. அதே போல் கொரோனாவுக்கு நேற்று முன்தினம் வரை 7,161 பேர் பலியாகி இருந்தனர். நேற்று புதிதாக 104 பேர் இறந்தனர். இதன்மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,265 ஆக உயர்ந்து உள்ளது.

நேற்று புதிதாக கொரோனா பாதித்தோரில் பாகல்கோட்டையில் 165 பேர், பல்லாரியில் 661 பேர், பெலகாவியில் 318 பேர், பெங்களூரு புறநகரில் 216 பேர், பெங்களூரு நகரில் 3,479 பேர், பீதரில் 82 பேர், சாம்ராஜ்நகரில் 80 பேர், சிக்பள்ளாப்பூரில் 85 பேர், சிக்கமகளூருவில் 171 பேர், சித்ரதுர்காவில் 232 பேர், தட்சிண கன்னடாவில் 404 பேர், தாவணகெரேயில் 144 பேர், தார்வாரில் 199 பேர், கதக்கில் 198 பேர், ஹாசனில் 426 பேர், ஹாவேரியில் 191 பேர், கலபுரகியில் 214 பேர், குடகில் 33 பேர், கோலாரில் 73 பேர், கொப்பலில் 259 பேர், மண்டியாவில் 246 பேர், மைசூருவில் 665 பேர், ராய்ச்சூரில் 190 பேர், ராமநகரில் 38 பேர், சிவமொக்காவில் 299 பேர், துமகூருவில் 294 பேர், உடுப்பியில் 126 பேர், உத்தரகன்னடாவில் 141 பேர், விஜயாப்புராவில் 30 பேர், யாதகிரியில் 235 பேர் உள்ளனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் 807 பேர்

கொரோனாவுக்கு நேற்று மட்டும் பெங்களூரு நகரில் 45 பேர், மைசூருவில் 15 பேர், பல்லாரியில் 8 பேர், தார்வாரில் 7 பேர் உள்பட 104 பேர் மரணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் நேற்று 67 ஆயிரத்து 955 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. ஒரே நாளில் 8 ஆயிரத்து 402 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் இதுவரை 3 லட்சத்து 52 ஆயிரத்து 958 பேர் குணம் அடைந்து உள்ளனர். 99 ஆயிரத்து 203 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதில் 807 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story