ராமநாதபுரம் வாலிபர் கொலை வழக்கு: 3 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி


ராமநாதபுரம் வாலிபர் கொலை வழக்கு: 3 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 15 Sep 2020 2:20 AM GMT (Updated: 15 Sep 2020 2:20 AM GMT)

ராமநாதபுரம் வாலிபர் அருண்பிரகாஷ் கொலை வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ராமநாதபுரம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் தாயுமானசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் அருண்பிரகாஷ் (வயது24), மற்றும் வசந்தநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் யோகேஸ்வரன் (20) ஆகியோர் சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டனர். அதில் அருண்பிரகாஷ் பலியானார். யோகேஸ்வரன் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து 12 பேரை தேடிவந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ராமநாதபுரம் பாம்பூரணி பகுதியை சேர்ந்த சலீம் சேட் என்பவரின் மகன் வாபா என்ற ரசாக்அலி (வயது23) என்பவர் கடலாடி கோர்ட்டிலும், ராமநாதபுரம் ஓம்சக்திநகர் வைகை நகரை சேர்ந்த முருகன் மகன் வெள்ளை சரவணன் என்ற சரவணக்குமார் (24) மற்றும் வைகை நகர் செல்வராஜ் மகன் விஜய் என்ற எலி (22) ஆகியோர் அருப்புக்கோட்டை கோர்ட்டிலும் கடந்த 3-ந் தேதி சரணடைந்தனர்.

விசாரணை

இவர்கள் 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன் மேற்கண்ட 3 பேரையும் 16-ந் தேதி மாலை வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் அழைத்துசென்று கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story