தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9 ஆயிரத்தை நெருங்குகிறது மருத்துவமனைகளில் 46,350 பேருக்கு சிகிச்சை


தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9 ஆயிரத்தை நெருங்குகிறது மருத்துவமனைகளில் 46,350 பேருக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 23 Sep 2020 2:43 AM GMT (Updated: 23 Sep 2020 2:43 AM GMT)

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9 ஆயிரத்தை நெருங்குகிறது. மருத்துவமனைகளில் 46 ஆயிரத்தை 350 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 82 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,228 ஆண்கள், 2,109 பெண்கள் என மொத்தம் 5,337 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 3 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 79 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 515 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 989 பேரும், கோவையில் 595 பேரும், திருப்பூரில் 369 பேரும், சேலத்தில் 291 பேரும், கடலூரில் 233 பேரும், செங்கல்பட்டில் 231 பேரும், திருவள்ளூரில் 230 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 7 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 64 லட்சத்து 36 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 5 லட்சத்து 52 ஆயிரத்து 674 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 3 லட்சத்து 33 ஆயிரத்து 187 ஆண்களும், 2 லட்சத்து 19 ஆயிரத்து 457 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 30 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 22 ஆயிரத்து 841 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 71 ஆயிரத்து 320 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

76 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 44 பேரும், தனியார் மருத்துவமனையில் 32 பேரும் என 76 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 19 பேரும், சேலத்தில் 11 பேரும், கோவை, ஈரோட்டில் தலா 4 பேரும், கடலூர், தென்காசி, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலையில் தலா 3 பேரும், திண்டுக்கல், காஞ்சீபுரம், நாமக்கல், சிவகங்கை, தேனி, திருப்பூரில் தலா 2 பேரும், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மதுரை, நீலகிரி, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவாரூர், திருச்சி, வேலூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 26 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 8,947 பேர் உயிரிழந்துள்ளனர்.

5,406 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 406 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 831 பேரும், கோவையில் 507 பேரும், திருப்பூரில் 394 பேரும், செங்கல்பட்டில் 371 பேரும், திருவள்ளூரில் 271 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 377 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 46 ஆயிரத்து 350 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 924 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 927 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 245 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று புதிதாக 2 தனியார் ஆய்வகங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 66 அரசு ஆய்வகங் கள் மற்றும் 110 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 176 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story