திருச்செந்தூரில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை


திருச்செந்தூரில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை
x
தினத்தந்தி 24 Sep 2020 11:00 PM GMT (Updated: 24 Sep 2020 6:49 PM GMT)

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளையொட்டி, திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்செந்தூர்,

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் இருக்கும் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க.

அ.தி.மு.க மாநில அமைப்புச் செயலாளர்கள் சி.த.செல்லபாண்டியன், என்.சின்னத்துரை ஆகியோர் தலைமையில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அ.தி. மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்லத்துரை, நீலமேகவர்ணம் மற்றும் அமலி டி.ராஜன், ஜெபமாலை, எஸ்.டி.கருணாநிதி, தளபதி கே.பிச்சையா, பகுதி செயலாளர் பி.சேவியர்,

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவ கூட்டுறவு இணைய தலைவர் முருகன், ஜோதிமணி, பி.டி.ஆர்.ராஜகோபால், ஸ்ரீவைகுண்டம் ஆறுமுகநயினார், காயல்பட்டினம் எம்.ஜே. செய்யது இப்ராகிம், அரசகுரு, ராஜா நேரு, பெருமாள், காயல்பட்டினம், அன்வர், ஜெயலலிதா பேரவை மூர்த்தி, ராம்கோபால், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி சேவியர் ராஜ், அரசு போக்குவரத்து கழக மண்டல தலைவர் சுபான், மண்டல இணை செயலாளர் சங்கர், ஆழ்வார்திருநகரி ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் அறிவுடைநம்பி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக மணிமண்டபத்துக்கு வந்தனர். அங்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

காங்கிரஸ்-தே.மு.தி.க.

காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.சந்திரசேகரன், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ராமகிருஷ்ணன், வட்டார தலைவர் சற்குரு, நகர தலைவர் முருகேந்திரன், வட்டார துணை தலைவர் கார்க்கி, நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் அழகேசன்,

தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதி பேராட்சி செல்வன், நகர செயலாளர் வீரபாகு, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுந்தர், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயபாலன், வர்த்தக அணி செயலாளர் மகாராஜன், ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, ஒன்றிய துணை செயலாளர் மாரியப்பன், களக்காடு சவுந்தர்ராஜ்,

காயாமொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தங்கேச ஆதித்தன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், பாஸ்கர், வேலவன், சங்க ஊழியர்கள் ஆனந்த ஜவகர், அந்தோணி இக்னேசியஸ், பே.சின்னதுரை, க.சின்னதுரை,

அ.ம.மு.க.-த.மா.கா.

அ.ம.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.மனோகரன், மாநில அமைப்பு செயலாளர் ஹென்றி தாமஸ், மாவட்ட இலக்கிய அணி தலைவர் வீரபுத்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எட்வின் பாண்டியன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணை செயலாளர்கள் சண்முககுமாரி, ஜேசு ராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் இல்லங்குடி, மாவட்ட வக்கீல் பிரிவு துணை செயலாளர் சேகர், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவர் அப்துல்காதர், ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜ், அம்மன் டி.நாராயணன், சிவசுப்பிரமணியன், முருகன், நகர செயலாளர்கள் முருகேசன், ரவி இன்பராஜ், சொளுக்கு, மாவட்ட துணை செயலாளர் பாத்திமா, இளம்பெண்கள் பாசறை செயலாளர் உலகம்மாள், ஒன்றிய இணை செயலாளர் விஜயலட்சுமி,

தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் மால்மருகன், மகேந்திரன், செல்வகுமார், தமிழக தொண்டர் இயக்க தலைவர் சுப்பிரமணி, மக்கள் நீதி மய்யம் கட்சி ஒன்றிய செயலாளர்கள் பசுபதி பகவத்சிங், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேஷ்குமார், கானம் நகர செயலாளர் முத்துராமலிங்கம்,

பா.ஜனதா

பா.ஜனதா கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் துரைராஜ், ஒன்றிய தலைவர் கிருஷ்ணன், தொழிலதிபர் சந்திரசேகர், சுந்தர், கிருஷ்ணன், கார்த்திக்,

இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி. ஜெயக்குமார், பா.ஜனதா வர்த்தக பிரிவு மாநில தலைவர் ராஜகண்ணன், செயலாளர் சத்தியசீலன், ராஜ்ஜிய சேவாபாரதி அகில பாரத அமைப்பாளர் சுந்தர லட்சுமணன், இந்து முன்னணி நகர செயலாளர் ராஜூ, பொதுச்செயலாளர் முத்துராஜ்,

சமத்துவ மக்கள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் தயாளன், ஒன்றிய செயலாளர் சோடா ரவி, உடன்குடி அழகேசன், துணைச் செயலாளர் சங்கர், மாவட்ட மகளிரணி ஜெயந்தி குமார், அவைத்தலைவர் தயா பாண்டியன், ஒன்றிய மகளிரணி சியாமளா, தூத்துக்குடி ஒன்றிய துணைத்தலைவர் செலின்ராஜ்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி

தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி இளைஞர் அணி செயலாளர் விடுதலை செழியன், சமத்துவ மக்கள் கழக மாநில துணை பொதுச்செயலாளர் காமராஜ், ஒன்றிய செயலாளர் சசிகுமார், ஒன்றிய இணை செயலாளர் காமராஜ், துணை செயலாளர் சக்திகுமார், இளைஞரணி செயலாளர் ஜெயபால்,

நாம் இந்தியர் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயகணேஷ், ஒன்றிய செயலாளர்கள் சரவணகுமார், வேலுச்சாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுரேஷ்குமார், இசக்கி ராஜா, இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ரவி கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சக்திவேல், அமைப்பாளர் தனலிங்கம்,

தட்சணமாற நாடார் சங்கம்

நெல்லை தட்சணமாற நாடார் சங்க செயலாளர் சண்முகவேல், சங்க பொருளாளர் செல்வராஜ், இயக்குனர்கள் கணேசன், தங்கவேல், ராதாகிருஷ்ணன், முருகேசபாண்டியன், பொன்னுசாமி ராஜா, காசிவிஸ்வநாதன், நயினார் கணேசன்,

பனங்காட்டு மக்கள் கழக தென் மண்டல அமைப்பாளர் சொர்ணவேல்குமார், திருச்செந்தூர் பொறுப்பாளர் மகேந்திரன், ஆறுமுகநேரி ஹேம்நாத், தூத்துக்குடி துரை, முத்தையாபுரம் அஸ்வின், தூத்துக்குடி ஒன்றியம் நேசராஜ், சாத்தான்குளம் தொகுதி செயலாளர் ஜெகன்,

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம்

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில துணைத்தலைவர் சாம் மனோகர், துணைப் பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், தாளமுத்து நகர் ஒன்றிய செயலாளர் மார்க்கஸ், அற்புதராஜ், மாவட்ட செயலாளர் ஜெயராஜ், காயாமொழி செயலாளர் முகம்மது முகைதீன், சண்முகசுந்தரம், அம்பி கண்ணன், அஜித்,

பனங்காட்டு படை கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், இளைஞரணி தலைவர் அந்தோணி, துணைப்பொதுச்செயலாளர் இமானுவேல், தெற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கற்குவேல் ஆறுமுகம், விருதுநகர் மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் சேவியர், மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், வக்கீல் மகேந்திரன்,

தமிழர் விடுதலை கொற்றம் தலைவர் வியனரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் நடேசன் ஆதித்தன், பா.ம.க. மாநில பொருளாளர் திலகபாமா, மாநில துணை பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பரமகுரு, மாவட்ட தலைவர் சிவபெருமாள்,

நாடார்கள் சங்கம்

தமிழ்நாடு நாடார்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீபெரும்புதூர் ராஜேஷ், சுந்தர்ராஜ், ராஜேஷ், கருப்பசாமி, செல்வகுமார்,

காயாமொழி ஊர் தலைவரும், ஓய்வுபெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார், முப்புராதி அம்மன் கோவில் அக்தர் வரதராஜ ஆதித்தன், ராஜன் ஆதித்தன், முருகன் ஆதித்தன், த.பாலசுப்பிரமணிய ஆதித்தன், எம்.சிவசுப்பிரமணிய ஆதித்தன், ஜவகர்,

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்ட தலைவர் காமராசு, துணை செயலாளர் பார்த்தீபன், துணை தலைவர் அழகேசன், இளைஞரணி செயலாளர் கவாஸ்கர், பாலமுருகன், திருச்செந்தூர் நாடார் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், தொழிலதிபர் பாலசந்தர், சிதம்பரம் பில்டர்ஸ் தண்டு பத்து ரகுராமன், சிவராமன், திருச்செந்தூர் சாய்பாபா கோவில் நிறுவனர் செல்வமுருகன், ஆத்தூர் சுற்றுவட்டார நாடார் உறவின்முறை சங்க தலைவர் தாமோதரன், பொருளாளர் லிங்கராஜ், வரண்டியவேல் பஞ்சாயத்து தலைவர் வசந்தி ஜெயக்கொடி, திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் திருப்பதி உள்ளிட்டோர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கிருமி நாசினி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மணிமண்டப வாசலில் கிருமி நாசினி வைக்கப்பட்டு இருந்தது. மாலை அணிவிப்பதற்காக மணிமண்டபத்துக்கு வந்தவர்கள், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னர் மாலை அணிவிக்க சென்றனர். அதேபோன்று அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர்.

Next Story