அரியலூரில் மேலும் 37 பேர் கொரோனாவால் பாதிப்பு பெரம்பலூரில் புதிதாக 14 பேருக்கு தொற்று


அரியலூரில் மேலும் 37 பேர் கொரோனாவால் பாதிப்பு பெரம்பலூரில் புதிதாக 14 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 28 Sep 2020 1:03 AM GMT (Updated: 28 Sep 2020 1:03 AM GMT)

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 37 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 14 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர்,

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 5 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிகளில் 4 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2 பேருக்கும் என நேற்று மொத்தம் 37 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,673 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கொரோனாவிற்கு 39 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 712 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 2,922 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 147 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

212 பேருக்கு பரிசோதனை

இதேபோல் நேற்று பெரம்பலூர் வட்டாரத்தில் 5 பேருக்கும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 4 பேருக்கும், ஆலத்தூர் வட்டாரத்தில் 3 பேருக்கும், வேப்பூர் வட்டாரத்தில் 2 பேருக்கும் என மொத்தம் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,779 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் ஏற்கனவே 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரை 1,628 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், தற்போது 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 212 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story