சேலம் மாவட்டத்தில் மேலும் 378 பேருக்கு கொரோனா தொற்று 5 பேர் பலி


சேலம் மாவட்டத்தில் மேலும் 378 பேருக்கு கொரோனா தொற்று 5 பேர் பலி
x
தினத்தந்தி 28 Sep 2020 3:11 AM GMT (Updated: 28 Sep 2020 3:11 AM GMT)

சேலம் மாவட்டத்தில் மேலும் 378 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 5 பேர் பலியாகி உள்ளனர்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் நோய் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 296 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 378 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிகிச்சை

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 177 பேர், எடப்பாடி ஒன்றிய பகுதியில் 4 பேர், காடையம்பட்டியில் 6 பேர், கொங்கணாபுரத்தில் 3 பேர், மகுடஞ்சாவடியில் 4 பேர், மேட்டூரில் ஒருவர், நங்கவள்ளியில் 4 பேர், ஓமலூரில் 28 பேர், சேலம் ஒன்றியம் பகுதியில் 13 பேர், சங்ககிரியில் 22 பேர், தாரமங்கலத்தில் 9 பேர், வீரபாண்டியில் 15 பேர், ஆத்தூர் ஒன்றியத்தில் 4 பேர், அயோத்தியாபட்டணத்தில் 4 பேர், கெங்கவல்லியில் 12 பேர், பனமரத்துப்பட்டியில் 14 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 9 பேர், தலைவாசலில் 2 பேர், வாழப்பாடியில் 11 பேர், ஏற்காட்டில் ஒருவர், எடப்பாடி நகராட்சியில் 12 பேர், மேட்டூர் நகராட்சியில் ஒருவர், நரசிங்கபுரம் நகராட்சியில் ஒருவர், ஆத்தூர் நகராட்சியில் 12 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கோவையில் இருந்து சேலம் வந்த 2 பேர், நாமக்கல்லில் இருந்து வந்த 5 பேர் மற்றும் தர்மபுரி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 18 ஆயிரத்து 685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 249 பேர் நேற்று குணம் அடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

5 பேர் பலி

பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த 52 வயது ஆண் ஒருவரும், கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த 62 வயது ஆண் ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் நேற்று அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதேபோல், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 84 வயது முதியவர், 70 வயது முதியவர், 53 வயது ஆண் ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது.

Next Story