புதிதாக 9,993 பேருக்கு வைரஸ் தொற்று பெங்களூருவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது


புதிதாக 9,993 பேருக்கு வைரஸ் தொற்று பெங்களூருவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது
x
தினத்தந்தி 6 Oct 2020 9:06 PM GMT (Updated: 6 Oct 2020 9:06 PM GMT)

கர்நாடகத்தில் நேற்று புதிதாக 9,993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. பெங்களூருவில் மட்டும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி உள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 91 பேர் இறந்தனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 6 லட்சத்து 47 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 9,993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 57 ஆயிரத்து 705 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் வரை 9,370 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து இருந்தனர். நேற்று புதிதாக 91 பேர் இறந்து உள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 9,461 ஆக உயர்ந்து உள்ளது.

புதிதாக பாகல்கோட்டையில் 84 பேரும், பல்லாரியில் 253 பேரும், பெலகாவியில் 153 பேரும், பெங்களூரு புறநகரில் 212 பேரும், பெங்களூரு நகரில் 5,012 பேரும், பீதரில் 30 பேரும், சாம்ராஜ்நகரில் 79 பேரும், சிக்பள்ளாப்பூரில் 152 பேரும், சிக்கமகளூருவில் 120 பேரும், சித்ரதுர்காவில் 332 பேரும், தட்சிண கன்னடாவில் 272 பேரும், தாவணகெரேயில் 279 பேரும், தார்வாரில் 126 பேரும், கதக்கில் 93 பேரும், ஹாசனில் 235 பேரும், ஹாவேரியில் 81 பேரும், கலபுரகியில் 103 பேரும், குடகில் 83 பேரும், கோலாரில் 161 பேரும், கொப்பலில் 125 பேரும், மண்டியாவில் 197 பேரும், மைசூருவில் 373 பேரும், ராய்ச்சூரில் 107 பேரும், ராமநகரில் 111 பேரும், சிவமொக்காவில் 224 பேரும், துமகூருவில் 475 பேரும், உடுப்பியில் 224 பேரும், தட்சிண கன்னடாவில் 150 பேரும், விஜயாப்புராவில் 80 பேரும், யாதகிரியில் 67 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

2 லட்சத்தை நெருங்குகிறது

புதிதாக பெங்களூரு நகரில் 34 பேர், மைசூருவில் 13 பேர், பெலகாவி, தட்சிண கன்னடாவில் தலா 7 பேர் உள்பட 91 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 10,228 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 5 லட்சத்து 33 ஆயிரத்து 74 பேர் குணம் அடைந்து உள்ளனர். 1 லட்சத்து 15 ஆயிரத்து 151 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 92 ஆயிரத்து 491 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 54 லட்சத்து 19 ஆயிரத்து 954 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 848 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

பெங்களூருவில் இதுவரை 1 லட்சத்து 98 ஆயிரத்து 369 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் பெங்களூருவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story