கொரோனா பாதித்த 25 ஆயிரம் பேர் குணமடைந்தனர்


கொரோனா பாதித்த 25 ஆயிரம் பேர் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 8 Oct 2020 10:38 PM GMT (Updated: 8 Oct 2020 10:38 PM GMT)

புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 25 ஆயிரம் பேர் குணமடைந்தனர்.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 669 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 386 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 326 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுவை மாநிலத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 20 ஆயிரத்து 349 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 349 பேருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. 30 ஆயிரத்து 539 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

அவர்களில் 4 ஆயிரத்து 727 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,701 பேர் ஆஸ்பத்திரிகளிலும் 3 ஆயிரத்து 26 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1.82 சதவீதம்

இதுவரை 25 ஆயிரத்து 256 பேர் குணமடைந்துள்ளனர். 556 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 461 பேர் புதுச்சேரியையும், 49 பேர் காரைக்காலையும், 42 பேர் ஏனாமையும், 4 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுவை மாநிலத்தில் உயிரிழப்பு என்பது 1.82 சதவீதமாகவும், குணமடைவது 82.70 சதவீதமாகவும் உள்ளது.

Next Story