கர்நாடகத்தில் புதிதாக 10,913 பேருக்கு கொரோனா பாதிப்பு வைரஸ் தொற்றுக்கு மேலும் 114 பேர் பலி


கர்நாடகத்தில் புதிதாக 10,913 பேருக்கு கொரோனா பாதிப்பு வைரஸ் தொற்றுக்கு மேலும் 114 பேர் பலி
x
தினத்தந்தி 9 Oct 2020 9:31 PM GMT (Updated: 9 Oct 2020 9:31 PM GMT)

கர்நாடகத்தில் புதிதாக 10,913 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 114 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெங்களூரு,

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 6 லட்சத்து 79 ஆயிரத்து 356 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 10 ஆயிரத்து 913 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 90 ஆயிரத்து 269 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 114 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,789 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக கொரோனா பாதித்தோரில் பாகல்கோட்டையில் 76 பேர், பல்லாரியில் 217 பேர், பெலகாவியில் 269 பேர், பெங்களூரு புறநகரில் 242 பேர், பெங்களூரு நகரில் 5,009 பேர், பீதரில் 12 பேர், சாம்ராஜ்நகரில் 72 பேர், சிக்பள்ளாப்பூரில் 154 பேர், சிக்கமகளூருவில் 129 பேர், சித்ரதுர்காவில் 418 பேர், தட்சிண கன்னடாவில் 376 பேர், தாவணகெரேயில் 450 பேர், தார்வாரில் 150 பேர், கதக்கில் 68 பேர், ஹாசனில் 489 பேர், ஹாவேரியில் 75 பேர், கலபுரகியில் 144 பேர், குடகில் 31 பேர், கோலாரில் 156 பேர், கொப்பலில் 65 பேர், மண்டியாவில் 250 பேர், மைசூருவில் 826 பேர், ராய்ச்சூரில் 73 பேர், ராமநகரில் 125 பேர், சிவமொக்காவில் 140 பேர், துமகூருவில் 366 பேர், உடுப்பியில் 177 பேர், உத்தரகன்னடாவில் 196 பேர், விஜயாப்புராவில் 92 பேர், யாதகிரியில் 66 பேர் உள்ளனர்.

மாதிரிகள் பரிசோதனை

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 57 பேர், பெலகாவியில் 5 பேர், சிக்பள்ளாப்பூர், தாவணகெரே, கோலாரில் தலா 4 பேர், மைசூருவில் 10 பேர், துமகூருவில் 6 பேர் உள்பட 114 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் நேற்று 1 லட்சத்து 9 ஆயிரத்து 980 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 57 லட்சத்து 39 ஆயிரத்து 530 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

ஒரேநாளில் 9,091 பேர் குணம் அடைந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் குணம் அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 61 ஆயிரத்து 610 ஆக அதிகரித்துள்ளது. 1 லட்சத்து 18 ஆயிரத்து 851 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதில் 873 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story