கொரோனா பாதிப்பு 32 ஆயிரத்தை தாண்டியது


கொரோனா பாதிப்பு 32 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 13 Oct 2020 10:45 PM GMT (Updated: 13 Oct 2020 10:45 PM GMT)

புதுவையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

புதுச்சேரி,

புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 4ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 268 பேருக்கு தொற்று உறுதியானது. 310 பேர் குணமடைந்துள்ளனர். 2 பேர் பலியாகி உள்ளனர். மாநிலத்தில் இதுவரை 2 லட்சத்து 41 ஆயிரத்து 787 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 294 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

567 பேர் பலி

32 ஆயிரத்து 4 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களில் 4ஆயிரத்து 572 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 1,628 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 944 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 26 ஆயிரத்து 865 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை 567 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 470 பேர் புதுச்சேரியையும், 51 பேர் காரைக்காலையும், 42 பேர் ஏனாமையும், 4 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள். புதுவையில் உயிரிழப்பு 1.77 சதவீதமாகவும், குணமடைவது 83.94 சதவீதமாகவும் உள்ளது.

புதுவையில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சுமார் 27 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். அவர்களுக்கு வேறுவிதமான உடல் உபாதைகள் உள்ளனவா? என்பது குறித்த ஆய்வும் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story