தாம்பரம் அருகே மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி 2 இளம்பெண்கள் பலி


தாம்பரம் அருகே மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி 2 இளம்பெண்கள் பலி
x
தினத்தந்தி 15 Oct 2020 11:05 PM GMT (Updated: 15 Oct 2020 11:05 PM GMT)

தாம்பரம் அருகே மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி 2 இளம்பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் வேளச்சேரி சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்ற இடங்களில் சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது.

இந்தநிலையில் நேற்று இரவு ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த பெருங்களத்தூரை சேர்ந்த மேரி ரோஸ்லின்(வயது 20), நடுவீரப்பட்டு பகுதியைச்சேர்ந்த கலைவாணி(19) ஆகியோர் சேலையூர் தனியார் வங்கி அருகே வரும்போது குண்டும் குழியுமான சாலையில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர்.

பஸ் சக்கரத்தில் சிக்கி பலி

அப்போது வேளச்சேரியில் இருந்து மேற்கு தாம்பரம் நோக்கி சென்ற மாநகர பஸ்சின் பின்பக்க சக்கரம் கீழே விழுந்த ரோஸ்லின், கலைவாணி இருவர் மீதும் ஏறி இறங்கியது. மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்கள் இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் பலியான இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய மாநகர பஸ் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story