மராட்டியத்தில் புதிதாக 11 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா பாதிப்பு


மராட்டியத்தில் புதிதாக 11 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 16 Oct 2020 9:16 PM GMT (Updated: 16 Oct 2020 9:16 PM GMT)

மராட்டியத்தில் புதிதாக 11 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 11 ஆயிரத்து 447 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 76 ஆயிரத்து 62 ஆக உயர்ந்து உள்ளது.

இதில் 13 லட்சத்து 44 ஆயிரத்து 368 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 1 லட்சத்து 89 ஆயிரத்து 715 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

306 பேர் பலி

இதேபோல மாநிலத்தில் புதிதாக 306 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 41 ஆயிரத்து 502 பேர் வைரஸ் நோய்க்கு பலியாகி உள்ளனர்.

மும்பையை பொறுத்தவரை புதிதாக 1,823 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நகரில் இதுவரை 2 லட்சத்து 38 ஆயிரத்து 544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 ஆயிரத்து 638 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று மட்டும் நகரில் ஆட்கொல்லி நோய்க்கு 37 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story