மாகியில் கொரோனா உயிரிழப்பு 5 ஆக உயர்வு


மாகியில் கொரோனா உயிரிழப்பு 5 ஆக உயர்வு
x
தினத்தந்தி 20 Oct 2020 9:59 PM GMT (Updated: 20 Oct 2020 9:59 PM GMT)

மாகி பிராந்தியத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 13 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 206 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 252 பேர் குணமடைந்துள்ளனர். கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லாஸ்பேட்டை குமரன்நகரை சேர்ந்த 56 வயது ஆணும், மாகியில் 90 வயது மூதாட்டியும் உயிரிழந்துள்ளனர். அதாவது கடந்த பல நாட்களாக மாகியில் உயிரிழப்பு என்பது இல்லாமல் இருந்தநிலையில் நேற்று ஒருவர் இறந்துள்ளார்.

தொடர் சிகிச்சை

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 2 லட்சத்து 70 ஆயிரத்து 189 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 33 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அவர்களில் 4 ஆயிரத்து 100 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,521 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 579 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 28 ஆயிரத்து 774 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 577 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 476 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். 52 பேர் காரைக்காலையும், 42 பேர் ஏனாமையும், 5 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

புதுவையில் உயிரிழப்பு என்பது 1.72 சதவீதமாகவும், குணமடைவது 86.02 சதவீதமாகவும் உள்ளது.

Next Story