கொரோனாவில் இருந்து மீண்டனர்: ஒரேநாளில் 9 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் கர்நாடக சுகாதாரத்துறை தகவல்


கொரோனாவில் இருந்து மீண்டனர்: ஒரேநாளில் 9 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் கர்நாடக சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 21 Oct 2020 10:00 PM GMT (Updated: 21 Oct 2020 10:00 PM GMT)

கொரோனாவில் இருந்து நேற்று ஒரேநாளில் 9 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாக, கர்நாடக சுகாதாரத்துறை கூறியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 7 லட்சத்து 76 ஆயிரத்து 901 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 5 ஆயிரத்து 872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 82 ஆயிரத்து 773 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்து 608 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். நேற்று மேலும் 88 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் சாவு எண்ணிக்கை 10 ஆயிரத்து 696 ஆக உயர்ந்து உள்ளது.

புதிதாக பாகல்கோட்டையில் 114 பேர், பல்லாரியில் 145 பேர், பெலகாவியில் 65 பேர், பெங்களூரு புறநகரில் 366 பேர், பெங்களூரு நகரில் 2,717 பேர், பீதரில் 14 பேர், சாம்ராஜ்நகரில் 33 பேர், சிக்பள்ளாப்பூரில் 116 பேர், சிக்கமகளூருவில் 73 பேர், சித்ரதுர்காவில் 74 பேர், தட்சிண கன்னடாவில் 215 பேர், தாவணகெரேயில் 304 பேர், தார்வாரில் 134 பேர், கதக்கில் 40 பேர், ஹாசனில் 140 பேர், ஹாவேரியில் 23பேர், கலபுரகியில் 83 பேர், குடகில் 51 பேர், கோலாரில் 49 பேர், கொப்பலில் 52 பேர், மண்டியாவில் 208 பேர், மைசூருவில் 220 பேர், ராய்ச்சூரில் 33 பேர், ராமநகரில் 23 பேர், சிவமொக்காவில் 177 பேர், துமகூருவில் 143 பேர், உடுப்பியில் 117 பேர், உத்தர கன்னடாவில் 74 பேர், விஜயாப்புராவில் 38 பேர், யாதகிரியில் 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

9 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 53 பேர், தட்சிண கன்னடாவில் 9 பேர், துமகூருவில் 4 பேர், ஹாசன், கலபுரகி, மைசூருவில் தலா 3 பேர், பல்லாரி, பெங்களூரு புறநகர், தார்வாரில் தலா 2 பேர், பெலகாவி, சித்ரதுர்கா, தாவணகெரே, கொப்பல், ராமநகர், சிவமொக்கா, விஜயாப்புராவில் தலா ஒருவர் என 88 பேர் இறந்தனர்.

நேற்று ஒரேநாளில் 9 ஆயிரத்து 289 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 71 ஆயிரத்து 618 ஆக உயர்ந்து உள்ளது. ஒரு லட்சத்து 440 பேர் சிகிச்சையில் உள்ளனர். 947 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நேற்று ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 241 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 69 லட்சத்து 52 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story