கர்நாடகத்தில், இதுவரை 70.60 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை சுகாதாரத்துறை தகவல்


கர்நாடகத்தில், இதுவரை 70.60 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 22 Oct 2020 10:43 PM GMT (Updated: 22 Oct 2020 10:43 PM GMT)

கர்நாடகத்தில் இதுவரை 70 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 7 லட்சத்து 82 ஆயிரத்து 773 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 5 ஆயிரத்து 778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 88 ஆயிரத்து 551 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்து 696 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். நேற்று மேலும் 74 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் சாவு எண்ணிக்கை 10 ஆயிரத்து 770 ஆக உயர்ந்து உள்ளது.

புதிதாக பாகல்கோட்டையில் 59 பேர், பல்லாரியில் 218 பேர், பெலகாவியில் 61 பேர், பெங்களூரு புறநகரில் 280 பேர், பெங்களூரு நகரில் 2,807 பேர், பீதரில் 6 பேர், சாம்ராஜ்நகரில் 29 பேர், சிக்பள்ளாப்பூரில் 237 பேர், சிக்கமகளூருவில் 80 பேர், சித்ரதுர்காவில் 79 பேர், தட்சிண கன்னடாவில் 154 பேர், தாவணகெரேயில் 58 பேர், தார்வாரில் 133 பேர், கதக்கில் 37 பேர், ஹாசனில் 95 பேர், ஹாவேரியில் 97பேர், கலபுரகியில் 55 பேர், குடகில் 49 பேர், கோலாரில் 52 பேர், கொப்பலில் 49 பேர், மண்டியாவில் 191 பேர், மைசூருவில் 308 பேர், ராய்ச்சூரில் 31 பேர், ராமநகரில் 16 பேர், சிவமொக்காவில் 93 பேர், துமகூருவில் 184 பேர், உடுப்பியில் 141 பேர், உத்தர கன்னடாவில் 60 பேர், விஜயாப்புராவில் 83 பேர், யாதகிரியில் 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

70.60 லட்சம் பேருக்கு சோதனை

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 36 பேர், கொப்பலில் 5 பேர், மைசூருவில் 4 பேர் உள்பட 74 பேர் இறந்தனர். நேற்று ஒரே நாளில்

13 ஆயிரத்து 550 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 84 ஆயிரத்து 835 ஆக உயர்ந்து உள்ளது. ஒரு லட்சத்து 440 பேர் சிகிச்சையில் உள்ளனர். 940 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நேற்று ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 354 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 70 லட்சத்து 60 ஆயிரத்து 189 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story