புதிதாக 5,535 பேருக்கு வைரஸ் தொற்று கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை நெருங்குகிறது


புதிதாக 5,535 பேருக்கு வைரஸ் தொற்று கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை நெருங்குகிறது
x
தினத்தந்தி 23 Oct 2020 9:53 PM GMT (Updated: 23 Oct 2020 9:53 PM GMT)

கர்நாடகத்தில் புதிதாக 5,535 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 88 ஆயிரத்து 551 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 5,535 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 93 ஆயிரத்து 907 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 51 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா தாக்கி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 821 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 8,749 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாநிலத்தில் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 93 ஆயிரத்து 584 ஆக அதிகரித்துள்ளது. 89 ஆயிரத்து 483 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 936 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாவணகெரேயில் 298 பேர்

கர்நாடகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், பாகல்கோட்டையில் 17 பேர், பல்லாரியில் 115 பேர், பெலகாவியில் 80 பேர், பெங்களூரு புறநகரில் 152 பேர், பெங்களூரு நகரில் 2,688 பேர், பீதரில் 3 பேர், சாம்ராஜ்நகரில் 40 பேர், சிக்பள்ளாப்பூரில் 108 பேர், சிக்கமகளூருவில் 102 பேர், சித்ரதுர்காவில் 99 பேர், தட்சிண கன்னடாவில் 329 பேர், தாவணகெரேயில் 298 பேர், தார்வாரில் 92 பேர், கதக்கில் 12 பேர், ஹாசனில் 109 பேர், ஹாவேரியில் 32 பேர், கலபுரகியில் 62 பேர், குடகில் 37 பேர், கோலாரில் 47 பேர், கொப்பலில் 27 பேர், மண்டியாவில் 168 பேர், மைசூருவில் 220 பேர், ராய்ச்சூரில் 70 பேர், ராமநகரில் 11 பேர், சிவமொக்காவில் 47 பேர், துமவருவில் 100 பேர், உடுப்பியில் 50 பேர், உத்தரகன்னடாவில் 113 பேர், விஜயாப்புராவில் 92 பேர், யாதகிரியில் 36 பேர் உள்ளனர்.

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 21 பேர், துமகூரு, தட்சிண கன்னடாவில் தலா 4 பேர், மைசூருவில் 3 பேர், பல்லாரி, சிக்பள்ளாப்பூர், தார்வார், ஹாசன், கோலார், சிவமொக்காவில் தலா 2 பேர் உள்பட 51 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 71 லட்சத்து 68 ஆயிரத்து 545 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 1 லட்சத்து 8 ஆயிரத்து 356 மாதிரிகள் அடங்கும்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு ஆகிய இரண்டும் வெகுவாக குறைந்துள்ளது. இது கொரோனா பீதியில் உள்ள மக்களுக்கு புதிய நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

Next Story