புதுச்சேரியில் மேலும் 158 பேருக்கு கொரோனா தொற்று


புதுச்சேரியில் மேலும் 158 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 23 Oct 2020 10:29 PM GMT (Updated: 23 Oct 2020 10:29 PM GMT)

புதுச்சேரியில் மேலும் 158 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி, 

புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 784 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 158 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 216 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருபுவனை மூகாம்பிகை நகரை சேர்ந்த 47 வயது பெண்ணும், ஜிப்மரில் தட்டாஞ்சாவடி வீமன் நகரை சேர்ந்த 72 வயது முதியவரும் பலியாகி உள்ளனர்.

தொடர் சிகிச்சை

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 2 லட்சத்து 82 ஆயிரத்து 40 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 2 ஆயிரத்து 44 ஆயிரத்து 463 பேருக்கு தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது. 33 ஆயிரத்து 986 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

அவர்களில் 3 ஆயிரத்து 975 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,548 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 2 ஆயிரத்து 427 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 29 ஆயிரத்து 427 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உயிரிழப்பு

இதுவரை 584 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 482 பேர் புதுச்சேரியையும், 54 பேர் காரைக்காலையும், 42 பேர் ஏனாமையும், 6 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதுவையில் உயிரிழப்பு 1.72 சதவீதமாகவும், குணமடைவது 86.59 சதவீதமாகவும் உள்ளது.

Next Story