தஞ்சை அருகே ஜனசதாப்தி ரெயில் நடுவழியில் நிறுத்தம் என்ஜினில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு + "||" + The Janasathapti train near Thanjavur was in a commotion due to smoke coming from a stop engine
தஞ்சை அருகே ஜனசதாப்தி ரெயில் நடுவழியில் நிறுத்தம் என்ஜினில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு
தஞ்சை அருகே ஜனசதாப்தி ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. என்ஜினில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்,
மயிலாடுதுறையில் இருந்து கோவைக்கு ஜனசதாப்தி ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மயிலாடுதுறையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு மாலை 3.43 மணிக்கு தஞ்சைக்கு வரும். தஞ்சையில் இருந்து 3.45 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு கோவையை சென்றடையும். வழக்கம் போல நேற்று மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்ட ரெயில் தஞ்சைக்கு மதியம் 3.58 மணிக்கு வந்தடைந்தது. தஞ்சையில் இருந்து 4 மணிக்கு புறப்பட்டது. தஞ்சையை அடுத்த ஆலக்குடி அருகே ரெயில்சென்ற போது திடீரென முதல்பெட்டிக்கும், என்ஜினுக்கும் இடையே திடீரென புகை வந்தது.
நடுவழியில் நிறுத்தம்
இதனால் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. ரெயிலில் பயணம் செய்த பயணிகள் புகை வந்ததால் அலறியடித்துக்கொண்டு இறங்கினர். இதையடுத்து என்ஜின்டிரைவர் கீழே இறங்கி பார்த்த போது என்ஜினில் மாடு அடிபட்டு சிக்கி இருந்ததால் புகை வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாடு அப்புறப்படுத்தப்பட்டது.
இதையடுத்து பயணிகள் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து ரெயில் புறப்பட்டு சென்றது. தஞ்சை அருகே நடுவழியில் ரெயில் 10 நிமிடம் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் காத்திருப்போர் பட்டியலும் முடிந்து முன் பதிவு செய்ய முடியாமல் ரெயில் பெட்டிகள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
நாளெல்லாம் பாடுபட்டு, தன் நிலத்தில் விதைத்து, பயிரிட்டு விளைச்சலை காணும் விவசாயிகளுக்கு, தன் விளைபொருட்களுக்கு நல்ல விலை இருந்தால்தான், அவர்களின் வாழ்க்கை சக்கரம் நிம்மதியாக ஓடும்.
மத்திய ரெயில்வே வழித்தடத்தில் நேற்று முதல் கூடுதலாக 28 மின்சார ரெயில் சேவைகள் விடப்பட்டு உள்ளது. விரைவில் 700 சேவைகளாக அதிகரி்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.