கொரோனா உயிரிழப்பில் தமிழகத்தை தாண்டிய கர்நாடகம் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கியது


கொரோனா உயிரிழப்பில் தமிழகத்தை தாண்டிய கர்நாடகம் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 28 Oct 2020 2:13 AM GMT (Updated: 28 Oct 2020 2:13 AM GMT)

கொரோனா உயிரிழப்பில் தமிழகத்தை கர்நாடகம் தாண்டி உள்ளது. மாநிலத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 5 ஆயிரத்து 947 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். நேற்று புதிதாக 3,691 கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 9 ஆயிரத்து 638 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்து 947 பேர் உயிரிழந்து இருந்தனர். நேற்று புதிதாக 44 பேர் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 10 ஆயிரத்து 991 ஆக அதிகரித்து உள்ளது.

புதிதாக பாகல்கோட்டையில் 34 பேரும், பல்லாரியில் 64 பேரும், பெலகாவியில் 50 பேரும், பெங்களூரு புறநகரில் 93 பேரும், பெங்களூரு நகரில் 1,874 பேரும், பீதரில் 13 பேரும், சாம்ராஜ்நகரில் 34 பேரும், சிக்பள்ளாப்பூரில் 73 பேரும், சிக்கமகளூருவில் 57 பேரும், சித்ரதுர்காவில் 70 பேரும், தட்சிண கன்னடாவில் 122 பேரும், தாவணகெரேயில் 36 பேரும், தார்வாரில் 45 பேரும், கதக்கில் 15 பேரும், ஹாசனில் 114 பேரும், ஹாவேரியில் 19 பேரும், கலபுரகியில் 31 பேரும், குடகில் 43 பேரும், கோலாரில் 16 பேரும், கொப்பலில் 22 பேரும், மண்டியாவில் 123 பேரும், மைசூருவில் 188 பேரும், ராய்ச்சூரில் 22 பேரும், ராமநகரில் 27 பேரும், சிவமொக்காவில் 103 பேரும், துமகூருவில் 92பேரும், உடுப்பியில் 86 பேரும், உத்தர கன்னடாவில் 78 பேரும், விஜயாப்புராவில் 128 பேரும், யாதகிரியில் 19 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

75 லட்சம் பேருக்கு சோதனை

நேற்று 7,740 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதனால் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 27 ஆயிரத்து 298 ஆக உயர்ந்து உள்ளது. 71 ஆயிரத்து 330 பேர் சிகிச்சையில் உள்ளனர். 944 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நேற்று 66 ஆயிரத்து 701 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒட்டுமொத்தமாக இதுவரை 75 லட்சத்து 14 ஆயிரத்து 194 பேரின் சளி, ரத்தம் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

புதிதாக பெங்களூரு நகரில் 24 பேர், பல்லாரி, தார்வார் நகரில் தலா 3 பேர், கலபுரகி, மைசூரு, உத்தர கன்னடாவில் தலா 2 பேர், பெலகாவி, தட்சிண கன்னடா, கோலார், சாம்ராஜ்நகர், ராய்ச்சூர், துமகூரு, உடுப்பி, விஜயாப்புராவில் தலா ஒருவரும் இறந்து உள்ளனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

தமிழகத்தை தாண்டியது

கர்நாடகத்தில் நேற்று 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா உயிரிழப்பில் தமிழ்நாட்டை கர்நாடகம் தாண்டி உள்ளது. நேற்று வரை தமிழகத்தில் 10,983 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகத்தில் கொரோனா உயிரிழப்பு 10,991 ஆக உள்ளது. இதன்மூலம் பாதிப்பிலும், உயிரிழப்பிலும் தமிழகத்தை கர்நாடகம் தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story