கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 30 ஆயிரம் பேர் குணமடைந்தனர்


கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 30 ஆயிரம் பேர் குணமடைந்தனர்
x
தினத்தந்தி 28 Oct 2020 3:09 AM GMT (Updated: 28 Oct 2020 3:09 AM GMT)

புதுவையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

புதுச்சேரி, 

புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 570 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 147 பேருக்கு தொற்று உறுதியானது. 163 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்புகள் ஏதும் இல்லை.

இதுவரை புதுவை மாநிலத்தில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 626 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 349 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது. 34 ஆயிரத்து 482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

30 ஆயிரம் பேர் குணம்

அவர்களில் 3 ஆயிரத்து 741 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,545 பேர் ஆஸ்பத்திரிகளிலும் 2 ஆயிரத்து 196 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 30 ஆயிரத்து 153 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவில் 588 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 485 பேர் புதுச்சேரியையும், 55 பேர் காரைக்காலையும், 42 பேர் ஏனாமையும், 6 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுவையில் உயிரிழப்பு 1.71 சதவீதமாகவும், குணமடைவது 87.45 சதவீதமாகவும் உள்ளது.

Next Story