தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது


தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2020 5:02 PM GMT (Updated: 23 Nov 2020 5:02 PM GMT)

தூத்துக்குடி அருகே, போலீசாரின் வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து திருட்டு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஸ்பிக்நகர், 

தூத்துக்குடி அருகே உள்ளமுள்ளக்காடு காந்திநகரை சேர்ந்த ஜெயம் மகன் ஆனந்த குமார். இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை, கடந்த 19-ந் தேதி மர்மநபர்கள் சிலர் திருடி சென்றனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் வாகன சோதனை

இந்த நிலையில் முத்தையாபுரம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் முள்ளக்காடு காந்திநகரில் மோட்டார் சைக்கிளை, திருடியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம், விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

அப்போது, அவர்கள் கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 36) , முள்ளக்காடு தேவி நகரைச் சேர்ந்தவர்களான கணேசன் மகன் மகேஷ்குமார் (20) மற்றும் பவுல்ராஜ் மகன் ஜேசுராஜ் (24) . என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து திருட்டு மோட்டார் சைக்கிளை, பறிமுதல் செய்த போலீசார் திருட்டில் ஈடுபட்ட 3பேரையும் கைது செய்தனர்.

Next Story