உடையார்பாளையத்தில் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உடையார்பாளையத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மற்றும் உடையார்பாளையத்தை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் தொடர்ந்து ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் உடையார்பாளையம் கடைவீதியில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பின. கழுமங்கலம் கிராமத்தில் உள்ள தைல மரக்காட்டில் குளம்போல் நீர் தேங்கியுள்ளது.
உடையார்பாளையத்தில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். மழையால் விவசாயிகள் வயல்களுக்கு செல்ல முடியாமலும் மற்றும் ஆடு, மாடுகளை மேய்க்க ஓட்டிச்செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.
பாதிப்பு
மேலும் மழையால் பொதுமக்கள் கடைவீதிக்கு சென்று மளிகை மற்றும் பிற பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். வியாபாரம் பாதிக்கப்பட்டதால், வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர். ஆட்டோக்கள் மற்றும் வேன் டிரைவர்கள் வேலையின்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மற்றும் உடையார்பாளையத்தை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் தொடர்ந்து ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் உடையார்பாளையம் கடைவீதியில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பின. கழுமங்கலம் கிராமத்தில் உள்ள தைல மரக்காட்டில் குளம்போல் நீர் தேங்கியுள்ளது.
உடையார்பாளையத்தில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். மழையால் விவசாயிகள் வயல்களுக்கு செல்ல முடியாமலும் மற்றும் ஆடு, மாடுகளை மேய்க்க ஓட்டிச்செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.
பாதிப்பு
மேலும் மழையால் பொதுமக்கள் கடைவீதிக்கு சென்று மளிகை மற்றும் பிற பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். வியாபாரம் பாதிக்கப்பட்டதால், வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர். ஆட்டோக்கள் மற்றும் வேன் டிரைவர்கள் வேலையின்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






