காஞ்சீபுரம் மாவட்ட முத்தியால்பேட்டை இந்திரா நகரில் ரூ.22 லட்சத்தில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி பூமி பூஜை

காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் ஏற்பாட்டின் பேரில், முத்தியால்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டிக்கான பூமி பூஜை விழா நடந்தது.
இந்த பூமி பூஜை விழாவில், காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி காஞ்சி பன்னீர்செல்வம், அரசு வழக்கறிஞர் அய்யம்பேட்டை கே.சம்பத், உள்பட திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






