காஞ்சீபுரத்தில் தீ விபத்து குடோனில் இருந்த 200-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் எரிந்து சேதம்


காஞ்சீபுரத்தில் தீ விபத்து குடோனில் இருந்த 200-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 14 Jan 2021 1:37 AM GMT (Updated: 14 Jan 2021 1:37 AM GMT)

காஞ்சீபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குடோனில் இருந்த 200-க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் எரிந்து சேதம் அடைந்தன.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் ஏகாம்பர நாதர் கோவில் சன்னதி தெருவில் சைக்கிள் விற்பனையகத்தின் குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் புதிய சைக்கிள்கள் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று திடீரென அந்த குடோனில் இருந்து புகை வெளிவர தொடங்கியது. தீ விபத்து குறித்து உடனடியாக அந்த பகுதி மக்கள் காஞ்சீபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

சைக்கிள்கள் சேதம்

இந்த தீ விபத்தில் 200-க்கும் மேற்பட்ட புதிய சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதுகுறித்து பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story