நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 18 பேருக்கு கொரோனா


நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் 18 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 22 Jan 2021 7:52 PM GMT (Updated: 22 Jan 2021 7:52 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் நெல்லை மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள்.

தென்காசி,    

நெல்லை மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் நெல்லை மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள்.

இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 510 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 15 ஆயிரத்து 231 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 212 பேர் உயிரிழந்துள்ளனர். 67 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தென்காசி மாவட்டத்தில் 13 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அவர்கள் தென்காசி, கடையம், ஆலங்குளம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 8 ஆயிரத்து 380 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 8,177 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 158 பேர் உயிரிழந்துள்ளனர். 45 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 232 ஆக அதிகரித்துள்ளது. இதில் 16 ஆயிரத்து 46 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 45 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 141 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளனர்.



Next Story