ஓசூர் அருகே வேன் மோதி பெண் சாவு


ஓசூர் அருகே வேன் மோதி பெண் சாவு
x
தினத்தந்தி 31 Jan 2021 5:54 AM GMT (Updated: 31 Jan 2021 5:54 AM GMT)

வேன் மோதி பெண் சாவு

ஓசூர்:
ஓசூர் மூக்கண்டப்பள்ளி அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மனைவி அமுதா (வயது 57). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் மூக்கண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் அமுதா மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அமுதா இறந்து விட்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story