கொரடாச்சேரி அருகே, சொத்தில் பங்கு கேட்டு வளர்ப்பு தந்தை மீது தாக்குதல்


கொரடாச்சேரி அருகே, சொத்தில் பங்கு கேட்டு வளர்ப்பு தந்தை மீது தாக்குதல்
x
தினத்தந்தி 1 Feb 2021 2:53 AM IST (Updated: 1 Feb 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி அருகே சொத்தில் பங்கு கேட்டு வளர்ப்பு தந்தை மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி போலீஸ் சரகம் பெருமாளகரத்தையை   சேர்ந்தவர் கோவி.மணி (வயது 73). இவரது உறவினர் மகன் ராஜ் (36). கோவி.மணிக்கு குழந்தை இல்லாததால் ராஜை வளர்த்து வந்துள்ளார். இந்தநிலையில் ராஜ் திருமணமாகி நீடாமங்கலம் அருகே சித்தமல்லி கிராமத்தில் வசித்து வருகிறார். இ்ந்தநிைலயில் சம்பவத்தன்று ராஜ் தனது வளர்ப்பு தந்தை கோவி.மணியிடம் சென்று எனக்கு உரிய சொத்தை பிரித்து கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இதனை ஏற்காத கோவி.மணி பிறகு பார்த்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.   

இதனால் ஆத்திரமடைந்த ராஜ் தகாத வார்த்தைகளால் வளர்ப்பு தந்தையை திட்டி அருகில் கிடந்த கம்பால் தாக்கினார். இதில் காயமடைந்த கோவி.மணியை திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோவி.மணி கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் வழக்குப்பதிவு செய்து ராஜை வலைவீசி  தேடி வருகின்றனர்.
1 More update

Next Story