வேடசந்தூர் அருகே லாரி உரிமையாளர் வீட்டில் 18 பவுன் நகைகள் கொள்ளை

வேடசந்தூர் அருகே லாரி உரிமையாளர் வீட்டில் 18 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள கிரியம்பட்டி பிரிவு பகுதியில் வசித்து வருபவர் சேகர். லாரி உரிமையாளர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு சென்றார். இதனால் அவரது வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டுக்குள் பீரோவில் வைத்திருந்த 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு அவர்கள் தப்பிச்சென்றனர். இதற்கிடையே நேற்று காலை வீட்டிற்கு வந்த சேகர், கதவு உடைக்கப்பட்டு நகைகள், பணம் ெகாள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story