செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 40 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 40 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 22 Feb 2021 4:56 PM GMT (Updated: 22 Feb 2021 4:56 PM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 446-ஆக உயர்ந்துள்ளது.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 446-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 51 ஆயிரத்து 281 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 777 பேர் உயிரிழந்துள்ளனர். 388 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 462 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 ஆயிரத்து 930 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 445 பேர் உயிரிழந்துள்ளனர். 87 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 30 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 44 ஆயிரத்து 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 43 ஆயிரத்து 186 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 176 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 696 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

Next Story