திருவாரூரில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி


திருவாரூரில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி
x
தினத்தந்தி 3 March 2021 6:17 PM GMT (Updated: 3 March 2021 6:17 PM GMT)

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் திருவாரூரில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருவாரூர்:
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் திருவாரூரில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தபட்டுள்ளது. அதன்படி அரசு அலுவலக கட்டிடங்களில் சுவர் விளம்பரங்கள் எழுதுதல், விளம்பர சுவரொட்டி ஒட்டுதல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகள், நடைபாதை ஆகிய இடங்களில் வாக்கு சேகரிக்கும் விதமாக வைக்கப்படும் விளம்பர தட்டிகள் வைக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விளம்பரங்கள் அழிக்கும் பணி 
இந்தநிலையில் திருவாரூர் நகரில் அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் சுவர்களில் அரசியல் கட்சிகள் வரைந்த சின்னங்கள், விளம்பரங்களை நகராட்சி ஊழியர்கள் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகி்ன்றனர். மேலும் அரசியல் கட்சிகளின் போஸ்டர்களும் கிழிக்கப்பட்டு வருகிறது. 
இதனை மீறி சுவர்களில் சின்னங்களை வரைவது, விளம்பர தட்டிகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Next Story